மதுரை: நேஷனல் ஹெரால்ட் வழக்கு பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பவ்யா நரசிம்ஹமூர்த்தி தெரிவித்தார்.
மதுரையில் இன்று மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொருளாளர் வெங்கடராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.