அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா என மூவரும் சதம் விளாசி அசத்தி உள்ளனர். இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.