புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் திடீரென விலகி உள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனையொட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டிருந்தார். அவர், காலில் காயமடைந்திருந்த போதிலும் வீல் சேரில் வந்து அணிக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிலையில் ராகுல் திராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி உள்ளதாக அந்த அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.