சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக கே.சாந்தாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்கிறது. சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்துள்ள இம்மருத்துவமனையில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன.
மொத்தமுள்ள 42 துறைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 500 பேர் உள்நோயாளிகளாக அனுமதியாகின்றனர்.