ராமேசுவரம்: பாம்பன் ரயில்வே தூக்குப் பாலங்கள் திறப்புக்காக ராமேசுவரம் கடற்பகுதியில் நான்கு நாட்களாக 3 சிறிய ரக சரக்கு கப்பல்கள் காத்துக் கிடக்கின்றன.
கொல்கத்தா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் துறைமுகங்களிலிருந்து சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் பாலங்களை கடந்து மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கும் செல்கின்றன.அதுபோல, தூத்துக்குடி, கன்னியாகுமாரி தென்பகுதி துறைமுகங்கள், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி துறைமுகங்களிருந்து வங்காள விரிகுடா கடற்பகுதிக்குச் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் ரயில், சாலை பாலங்கள் வழியாக தான் பயணித்து வருகின்றன.