சென்னை: மாநகராட்சி சார்பில் ரிப்பின் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கான உணவுக் கூடத்தை மேயர் ஆர்.பிரியா நேற்று திறந்துவைத்தார்.
சென்னை மாநகராட்சி பணியாளர்களின் நலனுக்காக மருந்தகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பணியாளர்கள் உணவு உண்பதற்கான கூடம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கலைஞர் மாளிகையின் கீழ்த்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.