லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது ரிஷப் பந்த்துக்கு இந்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் லண்டனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.