சென்னை பரங்கிமலை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தண்டவாளத்தைக் கடந்த கல்லூரி மாணவர்கள் முகமது நபூல், சபீர் அகமது ஆகிய இருவரும் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 வயதே நிரம்பிய அவர்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளனர். படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக துவங்க வேண்டிய அந்த மாணவர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்தது வருத்தமளிக்கும் விஷயம். அவர்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தில் மொபைல் போனில் பேசிக் கொண்டே அலட்சியமாக தண்டவாளத்தைக் கடந்ததே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.