நவீன மீன்பிடி முறைகள் மூலம் அழிந்துவரும் கட்டு மரங்களுக்கு தெர்மகோல் மூலம் மீண்டும் புத்துயிர் அளிக்கத் தொடங்கி உள்ளனர் ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள்.
பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் கடல், ஆறு, ஏரி, குளம் என நீர் நிலைகளால் சூழப்பட்டிருக்கின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் அற்ற பண்டைய காலங்களில் நீர் நிலைகளை போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தின் விளைவாக மரத்துண்டுகளை ஒன்றாக கட்டி தண்ணீரில் மிதக்க வைக்க முடியும் என்பதை தமிழர்கள் கண்டறிந்தனர். இதுவே கட்டு+மரம் = கட்டு மரம் என்றானது.