புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 27 வயது நபர் ரூ.19 கோடி ரொக்கம், ரூ.4 கோடி தங்கத்துடன் ஜாம்பியா விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான இந்திய இளைஞர் ஒருவர் துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். இவரது விமானம் ஜாம்பியாவின் லுசாகாவில் உள்ள கென்னத் கவுன்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி மீண்டும் புறப்பட தயாரானது.
அப்போது அந்த இளைஞரை இடைமறித்த ஜாம்பியா போதைப்பொருள் தடுப்பு அமலாக்கத்துறை ஆணைய அதிகாரிகள் (டிஇசி) அவரின் உடமைகளை சோதனையிட்டனர் . அதில், அவரது சூட்கேசில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2.32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.19.32 கோடி) மதிப்பிலான ரொக்கம், ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.