தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை ரூ.25 லட்சத்தில் அகற்றியும் பயனில்லை. மீண்டும் ஆகாயத் தாமரைகளால் ஏரி சூழப்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுத்தால் மட்டுமே ஆகாயத் தாமரை வளர்வதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தாம்பரம் அருகே பீர்க்கன்காரணையில் நீர்வளத் துறைக்கு சொந்தமான சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர் மலை ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் சேகரமாகிறது. இந்த ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன.