ராய்ப்பூர்: சத்தீஸ்கர் அரசு நடத்தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் முழுவதும் 750-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபானங்களை கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.