ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ரூ.75,000-ஐ தாண்டி உச்சம் தொட்டுள்ளது. இதற்கான காரணங்களையும், தங்கம் விலை ரூ.80,000-ஐ தொடுமா என்பது பற்றியும் சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
பொதுவாக, மக்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை பங்குச் சந்தை, பாண்டுகள், வங்கி டெபாசிட்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றின் மூலம் முதலீடு செய்வர். இவற்றில், அதிகம் பாதுகாப்பானதாக இருப்பது தங்கம்தான். உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த சூழல்களிலும் கூட மதிப்பு குறையாமலும், இதர வர்த்தகப் போக்குகளின் மதிப்பு குறையும் வேளைகளில் மதிப்பு உயருவதும்தான் தங்கத்தின் தனிச் சிறப்பு. எனவேதான், தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர்.