சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. எம்.ஜி முறையில் ரூ.10 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை சித்தாரா நிறுவனம் உறுதி செய்யவில்லை.