தேனி திமுக எம்பி-யான தங்கதமிழ்ச்செல்வனும் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜனும் ‘முட்டாப் பயலே’ என ஒருவரை மாற்றி ஒருவர் அரசு நிகழ்ச்சியில் அர்ச்சனை செய்து கொண்ட விவகாரம் அறிவாலய விசாரணைக்கு வருமளவுக்கு விவகாரமாகி இருக்கிறது.
கடந்த 2-ம் தேதி, ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட சக்கம்பட்டியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் தொடக்க விழாவில் தான் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் இப்படி வசை மாரி பொழிந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் தனது படத்தைப் போடவில்லை என முதலில் பிரச்சினையைக் கிளப்பியது தங்கதமிழ்ச்செல்வன் தான் என்கிறார்கள்.