2027 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை கட்டமைக்கும் பணியில் உள்ள இந்திய அணி நிர்வாகம் கடினமான ஓட்டப் பந்தயமான பிராங்க்கோ டெஸ்ட்டை இப்போது அறிமுகப்படுத்துவது ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியிலிருந்தும் ஒழித்துக் கட்டத்தான் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
யோ-யோ டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரித்தான ஃபிட்னெஸ் டெஸ்ட் என்றால் பிராங்க்கோ டெஸ்ட் என்பது ரக்பி போட்டித் தேர்வுக்கான டெஸ்ட் ஆகும். ரக்பி போட்டிகள் குறைந்த நேரமே நடக்கும் விளையாட்டாகும். கிரிக்கெட்டில் பெரிய அளவில் மூச்சுக்குழாய் தாங்கும் டெஸ்ட்களெல்லாம் தேவையே இல்லை. இந்த காமெடி யோசனையை யார் தந்தார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த பிராங்க்கோ டெஸ்ட் நுரையீரலை எரித்து விடும் என்று இதனை சிறுவயதில் பயிற்சி செய்த ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸும் எச்சரித்துள்ளார்.