மும்பை: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இதையொட்டி மும்பையில் நேற்று கேப்டன் ஷுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஷுப்மன் கில் கூறியதாவது:
நான் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பேட்டிங் வரிசையை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எங்கள் திட்டங்களை வகுக்க 10 நாட்கள் உள்ளன. இங்கிலாந்தில் 10 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறோம். இதனுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்துக்கு பின்னரே டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம்.