
வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கியவர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இவர் இப்போது இயக்கும் படத்துக்கு ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கிறார். தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கும் இந்த த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.

