திருச்சி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கூடுதல் மின்னழுத்தம் வழங்க ரூ.5000 வாங்கியதாக பொறியாளர் ஆறுமுகம் கைதானார். தற்போது ஓய்வு பெற்ற அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
The post லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.