சண்டிகர்: ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கில் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் 17 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008-ல் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிர்மல்ஜித் கவுர் என்பவரின் வீட்டில் ரூ.15 லட்சம் டெலிவரி செய்யப்பட்டது. நீதிபதி நிர்மல்ஜித் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தார். இது தொடர்பாக சண்டிகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் பிறகு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.