சென்னை: லண்டன் பயணத்தின் ஒருபகுதியாக மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியதுடன், அம்பேத்கர் தங்கியிருந்தஇல்லத்தையும் பார்வையிட்டார்.
முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்றுமுன்தினம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்மேதை ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘ஆக்ஸ்போர்டு சென்று விட்டு அங்கு உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமோ?’ என தெரிவித்திருந்தார்.