*திருவாரூர் அருகே சோகம்
திருவாரூர் : திருவாரூர் அருகே லாரி கவிழ்ந்து கோர விபத்தில் தந்தை, மகன், மகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வரகூர் கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் மோகன் (35).விவசாய கூலித்தொழிலாளியன இவர், நேற்று காலை தனது மகன் நிரோஷன் (7), மகள் சியாசினி (4) ஆகியோருடன் பைக்கில் மிளகாய்தூள் அரைப்பதற்காக அகர திருமாளம் பகுதியில் உள்ள மில் ஒன்றுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கோவில் திருமாளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பேரளம்- காரைக்கால் அகல ரயில் பாதை பணிக்காக கரூரில் இருந்து ஜல்லி ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலை வளைவில் திரும்பியது.
இதில் எதிர்பாராதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் இடது புறமாக கவிழ்ந்ததில் பைக்கில் லாரிக்கு இடையில் சிக்கிக்கொண்டது. பைக்கில் சென்ற மோகன், அவரது இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி கருண்கரட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், பொக்லைன் மூலம் லாரியை அகற்றினர். பின்னர் லாரிக்கு அடியில் சிக்கி இருந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.தந்தை மற்றும் 2 குழந்தைகள் பலியான சம்பவம் வருகூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post லாரி கவிழ்ந்து கோர விபத்து தந்தை, மகன், மகள் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.