லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இறங்கிய இந்திய அணி 4-ம் நாள் மாலையில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சரிடம் இழந்தது. அந்த ஷாட் தேர்வு படுமோசம் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஏனெனில் ஜோஃப்ரா ஆர்ச்சரே அந்தப் பந்தை முழு உத்வேகத்துடன் வீசவில்லை. அதை லூஸ்னர் என்றே வர்ணனையில் தெரிவித்தனர். அதை புல் ஷாட் ஆடப்போய் பெரிய கொடியாக ஏற்றி சேசிங்கையே பாழாக்கினார் ஜெய்ஸ்வால். இதனையடுத்து இங்கிலாந்து உத்வேகம் பெற்று அன்றே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது. மறுநாள் ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, பும்ரா, சிராஜ் சவால் கொடுக்க கிட்டத்தட்ட வெற்றி பெறுவதற்கு அருகில் வந்து பென் ஸ்டோக்ஸ் வயிற்றில் புளியைக் கரைத்து கடைசியில் ஒருவழியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது.