புதுடெல்லி: கடந்த 10 மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த 16 இந்தியத் தொழிலாளர்கள் நாளை (பிப்.5) இந்தியா திரும்ப உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிபிய சிமென்ட் நிறுவனத்தின் பெங்காசி ஆலையில் செப்டம்பர் 2024 முதல் சிறை போன்ற சூழ்நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக 16 இந்தியத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். நீண்ட வேலை நேரம், ஒழுங்கற்ற ஊதியம், ஒப்பந்தத்தை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை இந்திய தொழிலாளர்கள் முன்வைத்தனர். இந்த தொழிலாளர்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.