பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற இருந்த இந்தப் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பிரெட் லீ மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 18-ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.