சென்னை: லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி P.ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பொறுப்புத் தலைவராக இருந்து வருகிறார். நீதித்துறை சாராத உறுப்பினர்களாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவரான முனைவர் V.ராமராஜ் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினரான வழக்கறிஞர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
The post லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி P.ராஜமாணிக்கம் நியமனம் appeared first on Dinakaran.