புதுடெல்லி: நன்மையை கருத்தில் கொண்டே அரசாங்கம் வக்ஃப் வாரியத்தில் திருத்தங்களைச் செய்து வருகிறது என்றும், இதனால் எந்த மத சுதந்திரமும் பறிக்கப்படாது என்றும் வக்ஃப் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த அரசாங்கம் வக்ஃபில் திருத்தங்களைச் செய்வதன் நோக்கம் நன்மைக்காக மட்டுமே. இது எந்த மத சுதந்திரத்தையும் பறிக்காது. வக்ஃப் வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு, ஒரு மத அமைப்பு அல்ல.