கொல்கத்தா: வக்பு சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறை, போராட்ட சம்பவங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வக்பு சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதைத் தொடர்ந்து வக்பு சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தைஏற்க மறுத்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.