சென்னை: “வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா, கர்நாடகாவைப் போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,” எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசால் முன்மொழியப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதா 2024-ஐ எதிர்த்து, கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளைப் போலவே, தமிழக சட்டமன்றத்தில் ஒரு தனித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. இந்த மசோதா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகள், மதச்சார்பின்மை, மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் தமிழக அரசு இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.