பாட்னா: ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய தவறிய வக்பு வாரியங்கள், முறைகேடுகளின் கூடாரங்களாக திகழ்கின்றன என பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
வக்பு சட்ட திருத்தம் குறித்து பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மதபாகுபாடு இன்றி ஏழைகள், ஆதரவற்றவர்கள், பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தோடுதான் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆதரவற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற வக்பு வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. தவறான நிர்வாகம் காரணமாக வக்பு வாரிங்களின் மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது.