புதுடெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தரைவழியாக சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து கயிறு, சணல் பொருட்களை தரை மார்க்கமாக இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.