புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தீவிரமான மாணவர் போராட்டங்கள் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா இணைய தளம் மூலமாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்மோண்டியில் உள்ள ஹசினாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். பின்னர் அந்த வீடு இடிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வீட்டையும் போராட்டக்காரர்கள் இடித்து தீ வைத்து எரித்தனர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் திரண்ட போராட்டக்காரர்கள் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை இடிக்க தொடங்கினார்கள்.
The post வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை ஷேக் ஹசீனா வீடு இடிப்பு, தீவைப்பு appeared first on Dinakaran.