புதுடெல்லி: பல ஆயிரம் வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை சம்மனை அடுத்து இன்று (ஆக.5) அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார்.
66 வயதான அவர், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறையில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த வழக்கில் அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறையின் துணை மற்றும் இணை இயக்குனர்களின் மேற்பார்வையில் உதவி இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரி, அனில் அம்பானியிடம் விசாரணை மேற்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.