சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் மோடி நிறைவேற்றி விட்டதாககூறுகிறார் அண்ணாமலை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், ரூ.85 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு அனைத்து இந்திய குடிமக்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றெல்லாம் மோடி வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.
இந்த வாக்குறுதிகளில் எதை பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் நிறைவேற்றினார் என்பதை அண்ணாமலை ஆதாரத்துடன் விளக்கமாக கூறுவாரா? அமித்ஷா உள்ளிட்டவர்கள் மூலமாக எத்தகைய உத்திகளை கையாண்டாலும் தமிழ்நாட்டில் பாஜ காலூன்ற முடியாது.
The post வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட், கருப்பு பணம் மீட்பு பிரதமர் மோடி வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றினாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.