மதுரை: நாடு முழுவதும் வங்கிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்களை கூண்டோடு மாற்றி விட்டு, புதியவர்களை நியமிக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன், அடமானக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கியின் குழு வழக்கறிஞர் மற்றும் குழு பொறியாளரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். கடன் கேட்கப்படும் சொத்தின் உண்மை தன்மை குறித்து வழக்கறிஞரும், சொத்தின் மதிப்பு குறித்து பொறியாளரும் ஆய்வு செய்து வங்கிக்கு பரிந்துரை அனுப்புவர்.