புதுடெல்லி: மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அருணாசல பிரதேசத்தின் திராப், சங்லங், லாங்டிங் மாவட்டங்கள், அதேபோன்று நம்சாய், மகாதேவ்பூருக்கு உட்பட்ட பகுதிகள், அசாம் எல்லையை ஒட்டியுள்ள நம்சாய் மாவட்டத்துக்கு உட்பட்ட சவ்கம் காவல் நிலையங்கள் உள்ளிட்டவை ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் பிரிவு 3-ன் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.