வடசென்னையில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் புதிதாக அஞ்சலக பாஸ்போர்ட் மையம் திறக்கப்பட உள்ளது.
வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், வியாபாரம் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வெளி நாடு செல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன.