சென்னை: ‘வடசென்னை 3-வது அனல் மின் நிலையத்தில் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி வரும் மே மாதம் தொடங்கப்படும்’ என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் ரூ.10,158 கோடி செலவில் 800 மெகா வாட் திறனில் வடசென்னை-3 அனல் மின் நிலையத்தை மின்வாரியம் அமைத்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் முடிந்து 2024 மார்ச் 7ம் தேதி சோதனை ரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது.