துபாய் தொழிலதிபர் யூசுப் அலியுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, தமிழகத்தில் லூலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு கதவுகள் திறந்து விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செனாய் நகர், சென்ட்ரல், விம்கோ நகர் டிப்போ ரயில் நிலையங்களில் லூலு மார்க்கெட் கிளைகளை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பு, உள்ளூர் வணிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செனாய் நகர் ரயில் நிலையத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் 600 இருக்கைகள் கொண்ட சினிபிளக்ஸ் வசதியுடன் வணிக வளாகம் அமையவுள்ளது. அதேபோல், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 40 ஆயிரம் சதுர அடியிலும், விம்கோ நகர் டிப்போ ரயில் நிலையத்தில் 60 ஆயிரம் சதுர அடி வளாகத்திலும் வணிக வளாகம் அமையவிருக்கிறது.