மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் முறைகேடாக வணிகக் கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை ஆணையர் சித்ரா, தனிக் குழுவை அமைத்து மறு ஆய்வு செய்து வருகிறார்.
இதுவரை 200 திருமண மண்டபங்களை, குடியிருப்பு கட்டிடங்களாக காட்டி சொத்துவரி வசூல் செய்து வந்தது, ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.