சென்னை: சென்னை வண்டலூரில் உயர்நிலை மற்றும் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வனப்பகுதியில் புலி, யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 83 மரகத பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
The post வண்டலூரில் புதிய வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.