மதுரை: வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் துயரம் போன்று காஞ்சிபுரத்தில் தயாரித்த மருந்தை சாப்பிட்டு 23 குழந்தைகள் உயிரிழந்ததை ஏன் பேச மறுக்கிறோம். நீதியரசர் மீது தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் தரப்பினர் வழக்கறிஞர் ஒருவரை தாக்குகினர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முறைத்ததால் ஒரு தட்டு தட்டினோம் என அவர் மேடையில் பேசுகிறார். திருமாவளவன் மற்றும் அவருடன் இருப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் காரர்கள் தான் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். முறைத்தவர்களை தட்டவேண்டும் என நினைத்தால் தமிழகத்தில் திருமாவளவனுக்கு இடம் இல்லை.