நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தடுக்கப் போன ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது, இப்பிரச்சினையின் தீவிரத்தை நாம் அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏதுமறியாத பதின்பருவ வயதிலுள்ள மாணவரை இன்னும் குழந்தைப் பருவத்தை தாண்டாத சிறுபிள்ளையாகவே சட்டம் கருதுகிறது. இந்தப் பருவத்தில் செய்யும் எந்த தவறுக்கும் அவர்களை நேரடிப் பொறுப்பாளியாக்க முடியாது. மாறாக அந்த மாணவரைச் சுற்றியுள்ள சூழ்நிலை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சக மாணவர்களின் அணுகுமுறையையே குற்றத்திற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.