கேரள கல்லூரிகள் வன்முறை மற்றும் போதைப் பொருள் மையங்களாக திகழ்வதாக மாநில பாஜகவின் புதிய தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.
கேரளாவில் சைதன்யகுமாரி (20) என்ற நர்சிங் மாணவி கடந்த டிசம்பரில் தனது விடுதியில் தற்கொலைக்கு முயன்றார். இதனால் மூன்று மாதங்களுக்கும் மேலாக கோமா நிலையில் இருந்த அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்டதால் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.