துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால பந்துவீச்சை சமாளிப்பது எப்படி என திட்டமிட்டு வருவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் (Gary Stead) தெரிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இரு அணிகளும் ஒரே குரூப்பில் இந்த தொடரில் இடம்பெற்ற காரணத்தால் ஏற்கெனவே இந்த தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. அந்த மோதலில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த முறை வெற்றி பெறுகின்ற அணி சாம்பியன் பட்டத்தையும் வெல்லும். அதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு கூடி உள்ளது.