சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் நடந்த தீ விபத்தில் குற்றவியல் வழக்கறிஞரும், அவரது மனைவியும் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்தின் போது, முதல் தளத்தில் இருந்து குதித்து அவரது பேரனும், வீட்டு பணிப்பெண்ணும் உயிர் தப்பினர்.
சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் 4-வது தெருவில் 2 தளம் கொண்ட சொகுசு பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டில் குற்றவியல் வழக்கறிஞரான நடராஜன்(78), அவரது மனைவி தங்கம்(73), மகன் ஸ்ரீராம்(50), மருமகள் ஷியாமலா(45) பேத்தி ஸ்ரேயா(20), பேரன் ஷர்வன்(17) ஆகியோருடன் வசித்து வருகிறார். தங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக உள்ளார். ஸ்ரீராம் ஆடிட்டராக பணிப்புரிகிறார்.