சென்னை: வழக்கறிஞர் தொழில் உன்னதமான தொழில், வர்த்தகம் அல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கின் உண்மைத்தன்மை மற்றும் வழக்கறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூரில் நூர்ஜகான் பீவி, ஷேக் மாதர், அப்துல் ஹாசன் ஆகியோருக்கு சொந்தமான 3 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, விலைக்கு வாங்க கமலேஷ் சந்திரசேகரன் என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.