புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, “வாக்காளர் பட்டியல்களை அரசாங்கம் உருவாக்குவதில்லை என்ற உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்விகளை எழுப்பியுள்ளன” என்று கூறினார்.