*அதிகாரிகளுக்கு டிஆர்ஓ உத்தரவு
சித்தூர் : வாக்குச்சாவடிகளில் பூத் நிலை முகவர்களை நியமிக்க பிஎல்ஏ-2 படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டிஆர்ஓ உத்தரவிட்டுள்ளார்.
சித்தூர் மாவட்ட டிஆர்ஓ அலுவலக வளாகத்தில் நேற்று டிஆர்ஓ மோகன் குமார் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஆர்ஓ மோகன் குமார் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவு நீக்கம் திருத்தம் மற்றும் பிற கோரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் பதிலளித்து தீர்வு காணப்படும்.
கலெக்டர் சுமித் குமார் உத்தரவின்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் டிஎம் மற்றும் ஹெச்ஓ மற்றும் டிஆர்டிஏபிடியுடன் ஒருங்கிணைந்து இறந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்முறை அனைத்து தொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும்.
வாக்குச் சாவடிகளின் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் பதிவு, நீக்கம் திருத்தம் மற்றும் பிற கோரிக்கைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிஎல்ஓக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்குச்சாவடிகளில் பூத் நிலை முகவர்களை நியமிப்பதற்கான பிஎல்ஏ-2 படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு விடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக மாவட்டம் முழுவதும் 15,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 1,595 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. மிக விரைவில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரதிநிதி சுரேந்திர குமார், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதி உதய் குமார் ரெட்டி, சிபிஐ கட்சி பிரதிநிதி வாட கங்கராஜு, இந்திய தேசிய காங்கிரஸ் பிரதிநிதி பரதேசிதேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் வாசுதேவன் மற்றும் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
The post வாக்குச்சாவடிகளில் பூத் நிலை முகவர்களை நியமிக்க பிஎல்ஏ-2 படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.