ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவின்போது, நாதக வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி விட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம்சாட்டினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு, இன்று (பிப்.5) காலை முதல் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்நிலையில் இன்று மாலை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவு அலுவலகம் வந்த சீதாலட்சுமி கூறியது: “ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி முகவராக பணிபுரிய, நாதக சார்பில் இளைஞர்கள், பெண்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு திமுகவினர் நேற்று மிரட்டல் விடுத்துள்ளனர்.